கண்டி: இலங்கை - இங்கிலாந்து அணிகளிடையேயான 2வது டெஸ்டில், வெற்றியை தீர்மானிக்கும் பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 285 ரன்னும், இலங்கை அணி 336 ரன்னும் குவித்தன. இதையடுத்து, 46 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 324 ரன் எடுத்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 346 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.