புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சரிசெய்ய 11,371 பேர்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: `கஜா’ புயல் காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் மின் வழிதடங்கள், மின் கம்பங்கள், மின் மாற்றிகள், துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இங்கு நேற்று காலை முதல் சீரமைப்பு பணிகள் மிக துரிதமாக நடந்து வருகின்றன.மின் சீரமைப்பு பணியில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த 7,776 மின் பணியாளர்களும், பிற மின் வட்டங்களில் இருந்து சிறப்பு பணியாக அனுப்பப்பட்ட 3,400 மின் பணியாளர்களும், 195 அலுவலர்களும் சேர்ந்து மொத்தமாக 11,371 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தேவைக்கேற்ப கூடுதலாக பணியாளர்கள் பிற மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படுவார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: