சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 115க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அப்போலோ டாக்டர்கள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வரும் 19ம் தேதி பிற்பகலில் அப்போலோ தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர் ராமகிருஷ்ணன், 20ம் தேதி பெண்கள் நலமருத்துவர் சுமணா மனோகர், இதயசிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஆர்.கிரிநாத், இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் மாத்யூ சாமுவேல், 22ம் தேதி இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுந்தர், இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜயசந்திர ரெட்டி ஆகியோர், 23ம் தேதி இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ் மாணிக்கவேல், டாக்டர் பிரகாஷ் சந்த் ஜெயின் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் விசாரணை ஆணையம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.