திருவாரூர் கோயிலில் 3வது நாளாக சிலைகளின் உண்மைத்தன்மை ஆய்வு

திருவாரூர்:திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த 650 கோயில்களுக்கு சொந்தமான 3,500 சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.  இந்த சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.  3ம் கட்ட சோதனை 14ம் தேதி மீண்டும் தொடங்கியது. தொல்லியல் துறை சார்பாக தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையிலான அலுவலர்களும், சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாளில் 111 சிலைகள், 2வது நாளில் 111 சிலைகள் சோதனை செய்யப்பட்டன. 3ம் நாளாக நேற்று காலை 9.30 மணிக்கு சோதனை தொடங்கியது. 21 கோயில்களின் சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: