சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுக்காக தமிழக அரசை பாராட்டியுள்ளார். டிவிட்டரில் நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாக கொண்டு, தற்போது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.