சண்டிகர்: அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் நரேஷ். இவர் ஓட்டல் உரிமையாளரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தார். அவரை கைது செய்வதற்காக அரியானா போலீசார் சப் இன்ஸ்பெக்டர் ரன்பீர் சிங் (49) தலைமையில் ராஜஸ்தான் எல்லையில் உள்ள தருஹேருா- பிவாடி சாலை பகுதிக்கு சென்றனர். ரேவரி பகுதியில் சுற்றித் திரிந்த நரேஷை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது திடீரென நரேஷ், தான் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசார் மீது சுட்டான். இதில் படுகாயம் அடைந்த சப் இன்ஸ்பெக்டர் ரன்பீர் சிங் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.