பீர்பாட்டிலால் தாக்கி பார் ஊழியர் கொலை : வாலிபர் கைது

பூந்தமல்லி: வானகரத்தில் பீர்  பாட்டிலால் தாக்கிய பார் ஊழியர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, பாரில் வேலை செய்த சக ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம், ராஜீவ்காந்தி நகரில் இயங்கி வரும் ஒரு டாஸ்மாக் பாரில், சிவகங்கையை சேர்ந்த தர்மராஜ் (24), சத்யராஜ் (30) ஆகிய இருவரும் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த தீபாவளியன்று பாருக்குள் அதிகளவு மது அருந்தினர்.

அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி, அடிதடி ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தர்மராஜ், அங்கிருந்த ஒரு காலி பீர்பாட்டிலை எடுத்து, சத்யராஜின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். படுகாயம் அடைந்த சத்யராஜை சக ஊழியர்கள் மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிக்சை அளித்தனர்.

இதையடுத்து, சத்யராஜ் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கவே, அங்குள்ள மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இப்புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, பீர்பாட்டிலால் தாக்கிய தர்மராஜை நேற்று முன்தினம் மாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: