பூந்தமல்லி: வானகரத்தில் பீர் பாட்டிலால் தாக்கிய பார் ஊழியர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, பாரில் வேலை செய்த சக ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம், ராஜீவ்காந்தி நகரில் இயங்கி வரும் ஒரு டாஸ்மாக் பாரில், சிவகங்கையை சேர்ந்த தர்மராஜ் (24), சத்யராஜ் (30) ஆகிய இருவரும் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த தீபாவளியன்று பாருக்குள் அதிகளவு மது அருந்தினர்.
அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி, அடிதடி ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தர்மராஜ், அங்கிருந்த ஒரு காலி பீர்பாட்டிலை எடுத்து, சத்யராஜின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். படுகாயம் அடைந்த சத்யராஜை சக ஊழியர்கள் மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிக்சை அளித்தனர்.