வாகனங்கள் மோதியதில் 3 பேர் படுகாயம் பரங்கிமலை அருகே பைக் ரேஸ்: சிறுவன் உள்பட 7 பேர் கைது

ஆலந்தூர்: பரங்கிமலை அருகே பைக் ரேசில் ஈடுபட்டு விபத்து ஏற்படுத்திய 3 படுகாயமடைய காரணமாக இருந்த சிறுவன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் பாண்டியன் (35) என்பவர், கடந்த 11ம் தேதி இரவு தனது பைக்கில் தாய் ஆனந்தி (69), மகள் திவ்யுதா (8) ஆகியோருடன் கிண்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் பம்மல் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 10 பைக்குகளில் அதிவேகமாக வந்தவர்கள் பொன்ராஜ் பாண்டியன் பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்தனர். இதில், நிலை தடுமாறி விழுந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.  

பொன்ராஜ் பாண்டியன் அவரது மகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அவரது தாய் ஆனந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து உதவி கமிஷனர் யுவராஜ், இன்ஸ்பெக்டர்கள் அழகு, பழனிவேல் ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்தனர்.  அதில், சோழவரத்தை சேர்ந்த அருண் (20), ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அரி (24), சூளை பள்ளத்தை சேர்ந்த மோசஸ் (20), வியாசர்பாடியை சேர்ந்த சுரேஷ் (22), நெசப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (25), சோழவரத்தை சேர்ந்த தினேஷ் (19), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் பைக் ரேசில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான அருண் மீது கவரப்பேட்டை, சிப்காட், கும்மிடிப்பூண்டி, சோழவரம், பெரியபாளையம், வெங்கல் ஆகிய போலீஸ் நிலையங்களில் சாலை விபத்து, பைக் ரேஸ், பைக் திருட்டு, கூட்டு கொள்ளை ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: