நாகர்கோவில் அருகே வயலுக்குள் பாய்ந்த அரசு பஸ்

நாகர்கோவில்: பார்வதிபுரம் மேம்பாலப்பணி நடந்து வருவதால் மேற்கு மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் களியங்காடு, இறச்சகுளம் வழியாக நாகர்கோவில் வரும் வகையில் மாற்றுபாதையில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு கேரள அரசு பஸ் வந்துகொண்டு இருந்தது. இறச்சகுளம் அருகே வரும்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக இடதுபுறத்தில் பஸ்சை டிரைவர் ஒதுக்கினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த கேரள அரசு பஸ் சாலையோரம் உள்ள வயலுக்குள் பாய்ந்து சரிந்துநின்றது. வயலுக்குள் பாய்ந்த பஸ்சின் படிக்கட்டுவழியாக பயணிகள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களின் உதவியுடன் பஸ்சில் இருந்து அனைத்து பயணிகளும் ஜன்னல் வழியாக மீட்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: