கஜாவை எப்படி எதிர்கொள்வது என ஏற்கனவே திட்டமிட்டு அரசு செயலாற்றியது : முதல்வர் பேட்டி

திருச்செங்கோடு: கஜா புயலை எப்படி எதிர்கொள்வது என ஏற்கனவே திட்டமிட்டு அரசு செயலாற்றியதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றார்.

கடலோர மாவட்டங்களில் நிவாரண பணிகளை பார்வையிட அமைச்சர்கள் செல்ல உள்ளதாக கூறினார். புயல் பாதிப்பினால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: