புதுச்சேரி : புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பகுதியில் சேத மதிப்பீட்டு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் பேசிய அவர், புயல் சேதம் குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.