திருவனந்தபுரம் : சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடுதல் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். பம்பையில் நடைபெற்ற திருவாங்கூர் தேவசம் போர்டு அவசரக்கூட்டத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பத்மகுமார் தகவல் அளித்துள்ளார். வரும் திங்கட்கிழமை மனு தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.