சென்னை: கஜா புயல் பாதிப்பின் காரணமாகத் தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தில் 6 பயணியர் ரயில்களும், திருச்சிக் கோட்டத்தில் 8 பயணியர் ரயில்களும் ஒரு விரைவு ரயிலும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை - இராமேஸ்வரம் இடையிலான 4 பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி - இராமேஸ்வரம் இடையிலான 2 பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மயிலாடுதுறை - தஞ்சாவூர், திருச்சி - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - திருவாரூர், திருச்சி - மானாமதுரை, காரைக்குடி - திருச்சி ஆகிய நகரங்கள் இடையிலான 8 பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.