கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வேதாரண்யம் பகுதிகளில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு

நாகை : கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வேதாரண்யம் பகுதிகளில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது. வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விராலிமலை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். கொடும்பாலூர், குடுமியான்மலை உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: