ஓசூரை சேர்ந்த காதல் தம்பதி ஆணவக்கொலை: கர்நாடகா காவிரி ஆற்றில் உடல்கள் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த காதல் தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுது உடல்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட 3 பேரை காவல்துறை  கைது செய்துள்ளது. சூடுகொண்டபள்ளியை சேர்ந்த நித்திஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுவாதி ஆகியோர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். நித்திஷ் என்பவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக இருவரையும் காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது, கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதி காவிரி ஆற்றில் இருவரும் அழுகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் ஆணவக்கொலை செய்திருக்கலாம் என்ற சதேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள 4 பேரை கைது செய்ய காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. விசாரணையில், வேறு சமூகத்தை சேர்ந்த ஆணை திருமணம் செய்ததால், ஆத்திரம் அடைந்த சுவாதியின் தந்தை, உறவினர்கள்  5 பேருடன் சேர்ந்து அந்த தம்பதி இருவரையும் அடித்துக் கொன்றதாக தெரிய வந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: