கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த காதல் தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுது உடல்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. சூடுகொண்டபள்ளியை சேர்ந்த நித்திஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுவாதி ஆகியோர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். நித்திஷ் என்பவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக இருவரையும் காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.