சென்னை : சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் அதிவிரைவு ரயில் இன்று தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணை ரயில் தாமதமாக புறப்படும் என்பதால், எழும்பூரில் இருந்து மாலை 3.45க்கு பதில் இரவு 7.15க்கு பல்லவன் ரயில் புறப்படும் என கூறப்பட்டுள்ளது.