சென்னை : புயல் பாதித்த பகுதிகளில் மரங்களை அகற்றும் பணிகள் நடபெற்று வருகின்றன என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். புயல் அரபிக்கடல் பகுதிக்கு செல்லும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பேரிடர் மேலாண்மை வாரியத்தை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நன்றி கூறியுள்ளார். மேலும் எண்ணிலடங்கா உயிர்களை காக்கும்வகையில் கட்டுப்பாட்டு அறை அமைத்து செயல்பட்டு வருகிறோம் என அவர் தகவல் அளித்துள்ளார்.