கஜா புயல் காரணமாக 8 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சிவகங்கை : கஜா புயல் காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாகை, கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை,தஞ்சை,அரியலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக கடந்த 2 நாட்களாகவே நாகையில் விடுமுறையானது அளிக்கப்பட்டுள்ளது. நாகை, புதுச்சேரியிலும் இந்த நிலைமையை தொடர்ந்து நேற்று நள்ளிரவில் கஜா புயல் முழுமையாக தன்னுடைய கோரத்தாண்டவத்தை அடுத்து முழுமையாக சேதமடைந்தது. எனவே இந்த 8 மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் மழை...

கஜா புயலின் மையப்பகுதி கரையை கடந்து விட்ட நிலையில் கடலூர், ராமநாதபுரம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் இன்றும் மதுரை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதுரை அண்ணாநகர், மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: