பாட்னா: ‘‘சக்திவாய்ந்த சிசிடிவி கேமிராவை பக்கத்து வீட்டு சுற்றுச்சுவரில் பொருத்தி, எனது வீட்டை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கண்காணிக்கிறார்’’ என எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் அரசு இல்லம் தலைநகர் பாட்னாவில் உள்ள சர்க்குலர் ரோட்டில் அமைந்துள்ளது. இவரது வீட்டுக்கு பின்னால் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் தேஜஸ்வி யாதவ் வீடு உள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் வீட்டின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவரில் திடீரென சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேஜஸ்வி யாதவ் டிவிட்டரில் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: முதல்வர் வீட்டுக்கு 3 பக்கமும் மெயின் ரோடுகள் உள்ளன. அவரது வீட்டுக்கு பின்புறம் எனது பங்களா உள்ளது.