மயிலாப்பூரில் ஆபாச படம் காட்டி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி: முதியவருக்கு சரமாரி அடி உதை

சென்னை: வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த பள்ளி மாணவிக்கு, ஆபாச படம் காட்டி,  பலாத்காரம் ெசய்ய முயன்ற முதியவருக்கு சரமாரியாக அடி உதை விழுந்தது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 11 வயது மாணவி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் தையல் கடை நடத்தி வரும் ரவி (58) என்பவர், மாணவியிடம் விளையாடுவது போல் நடித்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பிறகு பள்ளி மாணவிக்கு தனது செல்போனில் இருந்த ஆபாசப்படங்களை காட்டியுள்ளார். பிறகு மாணவியை, ரவி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் பள்ளி மாணவி அலறியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ரவியின் வீட்டை தட்டியுள்ளனர். ஆனால் அவர் கதவை திறக்காமல் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் அப்பகுதி மக்கள் வீட்டின் கதவை உடைத்து ரவியை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவரிடம் இருந்து பள்ளி மாணவியையும் பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கமலாதேவி சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்து ரவியை மீட்டனர். பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். அதை ெதாடர்ந்து ரவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் ெசய்யும் நோக்கில் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவனிடம் இருந்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: