கருணாநிதிக்கு புகழஞ்சலி

திருவொற்றியூர்: சென்னை வடக்கு மாவட்ட திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவெற்றியூர் வடக்கு மாடவீதி தெருவில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேச்சாளர்கள் திருச்சி சிவா, பேராசிரியர் சு.ப.வீரபாண்டியன், அருள்மொழி, அப்துல் காதர் உள்பட 76 கவிஞர்கள் கருணாநிதியின் புகழை விளக்கிப் பேசினர். தொடர்ந்து கருணாநிதி மக்கள் நல பணிகள் குறித்த நூல் வெளியிடப்பட்டது. நிர்வாகிகள் எம்.என்.கணேஷ், குறிஞ்சி கணேசன், துக்காராம், திரிசங்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: