வாலிபருக்கு அரிவாள் வெட்டு

தாம்பரம்: சென்னை மேற்கு தாம்பரம், காந்தி நகர், சாலப்பா தெருவை சேர்ந்தவர் விஜய் (18). இவர், நேற்று அதிகாலை 12:45 மணியளவில் இவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் விஜயை அரிவாளால் தலை, கை, முதுகில் சராமரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இதில் பலத்த காயமடைந்த விஜய் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த பத்ரி (எ) விஜயகுமாரும், வெட்டுபட்ட விஜயும் நண்பர்கள் எனவும், இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளி மாணவியை காதலித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வெட்டு விழுந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து, தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: