சபரிமலைக்கு சுவீதா ரயில்கள்

சென்னை: சபரிமலை சீசனை முன்னிட்டு சுவீதா சிறப்புகட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரலில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 11ம் தேதி இரவு 8.40 மணிக்கு புறப்படும். அதைப் போன்று கொல்லம்- சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 25ம் தேதி, அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி கொல்லத்தில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் மேலும் தாம்பரம்- கொல்லம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி 11, 14 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் மாலை 5.15 மணிக்கு புறப்படும்.

கொல்லத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 15,17,19 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணிக்கு புறப்படும். மேலும் தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 24ம் தேதி மாலை 5.15 மணிக்கு ரயில்கள் புறப்படும். கொல்லத்தில் இருந்து டிசம்பர் 22ம் தேதி காலை 11.30 மணிக்கு புறப்படும். அதைப் போன்று தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 24ம் தேதி மாலை 5.15 மணிக்கு புறப்படும். அதைப் போன்று கொல்லத்தில் இருந்து டிசம்பர் 22ம் தேதி காலை 11.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: