சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கேஎஸ்ஆர் பெங்களூரூ ரயில் பாதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அரக்கோணம் - ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 11.20 முதல் 14.40 வரை தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே அரக்கோணம் கேஎஸ்ஆர் பெங்களூரு பயணிகள் ரயில் அரக்கோணம் ஜோலார் பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டு, ஜோலார்பேட்டை முதல் பெங்களூரு வரை மட்டும் இயக்கப்படும். இதற்கு, பதிலாக காலை 8 மணிக்கு அரக்கோணத்திலிருந்து ஜோலார் பேட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் காலை 10.30 மணிக்கு ஜோலார் பேட்டை சென்றடையும். இந்த ரயில் சோளிங்கர், வாலாஜா ரோடு, காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்,