புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் 55,000 கோடி நஷ்டத்தில் உள்ளது. இந்த நிறுவன சொத்துக்கள் சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ளன. 2012ம் ஆண்டிலேயே சொத்து விற்பனை மூலம் நிதி திரட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. 2014 முதல் 2021 வரை 5,000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 70 வணிக மற்றும் குடியிருப்பு பகுதி சொத்துக்களை விற்பனை செய்து 700 முதல் 800 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.