மிசோரமுக்கு புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்

புதுடெல்லி:  மிசோரம் மாநிலத்தில் வரும் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக இருக்கும் சசாங்கை பணியிட மாற்றம் செய்யும்படி கோரிக்கைகள் வலுத்தன. திரிபுராவில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள ப்ரூ சமூகத்தினர் அங்கேயே வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என சசாங்க் தெரிவித்திருந்தார். இதற்கு இந்த சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சர்ச்சைக்குரிய சசாங்கை இடமாற்றம் செய்யக்கோரி 15 நாட்களுக்கு முன் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரி ஆஷிஸ் குந்த்ராவை புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: