கொல்லத்தில் பேஸ்புக் அட்மின்கள் இடையே மோதல்: வீடு சூறை: 15 பேர் கைது

திருவனந்தபுரம்: கொல்லத்தில் பேஸ்புக் குரூப் அட்மின்கள் மோதலில் வீடு சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (23). இவரது நண்பர் நவ்ஷாத் (22). இவர்கள் இருவருமாக ‘காதல் மழையில்’ என்ற பெயரில் ஒரு பேஸ்புக் குரூப் நடத்தி வந்தனர்.  கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராகுலை பேஸ்புக் குரூப்பில் இருந்து நவ்ஷாத் நீக்கினார். இதுகுறித்து ராகுல் சக நண்பர் பிரதீஷ் (20) என்பவரிடம் கூறியுள்ளார். இதை பிரதீஷ் போனில் நவ்ஷாத்திடம் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையேயும் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரதீஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நவ்ஷாத் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் அங்கு இல்லை. இதையடுத்து அருகில் உள்ள நவ்ஷாத் உறவினர் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கினர். இதையடுத்து  பூயப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுல், பிரதீஷ், பிரசாத் (22), பாகுலேயன் (18), அகில் (20) உள்பட 15 பேரை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: