வீட்டில் கஞ்சா விற்ற தாய், மகன் கைது : 4 பட்டாக்கத்திகள், 13 செல்போன்கள், பணம் பறிமுதல்

சென்னை: ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் கஞ்சா விற்ற தாய், மகனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, பணம், 4 பட்டாகத்திகள், 13 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆலந்தூர் அம்பேத்கர் நகரில் கஞ்சா  மற்றும்  போதை  பொருட்கள் விற்பனை செய்வதாக பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமிக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்  திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது, ஆதம்பாக்கம்  அம்பேத்கர்  நகர் 3வது தெருவில் உள்ள  ஒரு  வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த புஷ்பவள்ளி (39), மற்றும்  அவரது  மகன்  பவுல் (19) ஆகிய 2 பேரை  கையும் களவுமாக  கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 கஞ்சா பொட்டலம் மற்றும் கஞ்சா விற்ற பணம் ரூ.3000 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களது வீட்டில் இருந்து  4 பட்டாக்கத்திகள், 13  செல்போன்களையும்  பறிமுதல் செய்தனர். பின்னர் தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்ட தாய், மகன் 2 பேரையும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

* பரங்கிமலையில் மின்சார ரயில் மோதி போரூர் அடுத்த ஆலப்பாக்கம், ராஜீவ்காந்தி சாலை, பலராமன் தெருவை சேர்ந்த இடியாப்பம் வியாபாரி சதீஷ்குமார் (29) பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத நபர் இறந்தார்.  

* மாதவரத்தில் ஓடும் பஸ்சில் செங்குன்றம் அடுத்த தாமரைப்பாக்கம், குருவாயல் கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி ரங்கநாதன் (49), என்பவரிடம் ரூ.1.50 லட்சத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

* அடையார், கற்பகம் கார்டன், 1வது மெயின்ரோடு தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் அசோக் (40). அதே குடியிருப்பில் காவலாளியாகவும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அசோக் தூங்குவதற்கு போதையில், 5வது மாடிக்கு சென்றார். பின்னர் இரவு 12.30 மணிக்கு தரைத்தளத்தில் படுகாயத்துடன் விழுந்து சடலமாக கிடந்தார்.

* சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த செங்குன்றம் சேது (எ) சேதுபதி, செ ராஜேஷ் (எ) கட்டாரி ராஜேஷ் (26), மதுரவாயல், பல்லவன் நகரை சேர்ந்த ஐசக் (31), ஆகிய மூன்று பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

* தாம்பரம் - முடிச்சூர் சாலை பாலம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் மேலாளர் பாபு (50) என்பவரிடம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்தை பறித்த மண்ணிவாக்கம் வினோத்குமார் (35), வண்டலூர் சிராஜூதீன் (53), கிளாம்பாக்கம் பாபு (38) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். வீரா என்பவர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்நிலையில்,  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கணேசன் (எ) மண்டை (22) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

* கொடுங்கையூர் சீத்தாராமன் நகர் 3வது தெருவை சேர்ந்த பாபுராவ் (58) என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், பீரோவில் வைத்திருந்த 3 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

*  பள்ளிக்கரணை பல் மருத்துவக்கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே காலி நிலத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* ராயப்பேட்டை முகமது உசேன் தெருவை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் சத்தியநாராயணன் (25) என்பவரிடம் நேரம் கேட்பது போல நடித்து செல்போனை பைக் ஆசாமிகள் பறித்து சென்றனர்.

* தேனாம்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (26)உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: