மாமல்லபுரம் அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலி

மாமல்லபுரம் : சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் முன்னே சென்ற காரை முந்த முயன்ற கார் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பேருந்தின் மீது அதிவேகமாக மோதியதில் காரில் வந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  கடலூரைச் சேர்ந்த மீனவர்கள் 50 பேர் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வை முடித்துக்கொண்டு தனியார்  பேருந்தில் கடலூர் திரும்பிக்கொண்டிருந்தனர். அதே நேரம் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி 5 பேர் கொண்ட குழுவினர் காரில் வந்துகொண்டிருந்தனர்.

alignment=

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி அருகே இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் பேருந்தின் அடியில் சிக்கி உருத்தெரியாமல் நொறுங்கியது. காரில் பயணித்த 5 பேர் உடல் நசுக்கி பலியாகி உள்ளனர், இதில் இருவரின் உடல் அடையாளம் தெரிந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை பெரம்பூரை சேர்ந்த சதிஷ் மற்றும் கார்த்திக் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மூவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

alignment=

பேருந்தில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து தீயணைப்புத்துறையினருடன் வந்த காவல்துறையினர் காருக்குள் சிக்கியிருந்த உடல்களை போராடி மீட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காகவும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான கார் தமக்கு முன்னால் சென்ற காரை அதிவேகமாக முந்த முயன்றபோது பேருந்து மீது மோதியதாக பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவிதித்தாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: