ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள்

திருவொற்றியூர்: முன்னாள் மத்திய அமைச்சர் என்.வி.என் சோமு 21ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி எண்ணூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாநில திமுக மாணவரணி துணை செயலாளர் கவி.கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் நகராட்சி தலைவர் திருசங்கு முன்னிலை வகித்தார். இதில் மாநில மருத்துவ அணி செயலாளர் கனிமொழி 150 ஆதரவற்றவர்களுக்கு சோப்பு, சீப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிர்வாகிகள் மணி, ஆனந்தன், பிரகாஷ், பாலு, சந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: