அங்கன்வாடி குழந்தைகளுக்கு தாசில்தார் பரிசு

பெரம்பூர்: தண்டையார்பேட்டை சேணியம்மன் கோயில் தெருவில் 7 அங்கன்வாடி மையம் இயங்கி வருகின்றன. இவற்றில் 150 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். குழந்தைகள் தினத்தை ஒட்டி, நேற்று  தண்டையார்பேட்டை தாசில்தார் சேகர் அங்கன்வாடி மையத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், விளையாட்டு பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் தாசில்தார் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: