சென்னை: ஏஜிஎஸ் அலுவலகங்களுக்கு இடையிலான தென் மண்டல கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட தமிழக அணி தகுதி பெற்றது. இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையின் சார்பில் தென் மண்டல அலுவலகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. போட்டியை வணிக தணிக்கை பிரிவு முதன்மை இயக்குநர் ஆர்.அம்பலவாணன் தொடங்கிவைத்தார். போட்டி ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு தலைமை கணக்காளர் ஆர்.திருப்பதி வேங்கடசாமி உள்ளிட்ட உயரதிகாரிகள் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் தென் மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா-தெலுங்கானா, கேரளா ஏஜிஎஸ் அணிகள் விளையாடுகின்றன. சேத்துபட்டு, நேரு பூங்கா விளையாட்டுத் திடலில் நடந்த முதல் அரை இறுதியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின.