‘நைனா... இன்னொரு லார்ஜ் குடுய்யா’....விமானத்தில் கூடுதல் மது தர மறுப்பு ஊழியரை அடித்து உதைத்த பெண்

மும்பை: கடந்த 10ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று மும்பையில் இருந்து லண்டனுக்கு சென்று கொண்டிருந்தது. வெளிநாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரும் இந்த விமானத்தில் பயணம் செய்தார். விமானத்தில் மது அருந்தியதால் நல்ல போதையில் இருந்த அவர், விமான ஊழியரை அழைத்து தனக்கு கூடுதலாக மதுபானம் தருமாறு கேட்டார். விமான ஊழியர் அதற்கு மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், ஊழியரை கண்டபடி திட்டியதுடன் அடித்து உதைக்கவும் செய்தார். விமானத்தில் இருந்த வேறொரு ஊழியர் இதை வீடீயோ எடுத்தார்.

அது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.  இந்த சம்பவம் தொடர்பாக பெண் பயணிக்கு எதிராக ஏர் இந்தியா தரப்பில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. விமானம் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் போய் தரையிறங்கியதும் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2017 செப்டம்பர் மாதம் வெளியிட்ட உத்தரவு ஒன்றின்படி விமானத்தில் கலவரத்தில் ஈடுபடும் பயணியை விமானத்தில் பயணம் செய்வதில் இருந்து மூன்று மாதத்தில் இருந்து ஆயுட்காலம் வரை தடை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: