குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம் மாமியார் வீட்டிற்குள் புகுந்து மனைவி கழுத்தறுத்து கொலை: கணவனும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

சென்னை: குடும்பம் நடத்த வீட்டிற்கு வராததால் ஆத்திரமடைந்த கணவன் தனது மாமியார் வீட்டிற்குள் புகுந்து மனைவியை கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்தார். மனைவி இறந்த அச்சத்தால் கணவனும் தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை குன்றத்தூர் ெபரியார் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவர் தனது அத்தை மகள் சவுமியா (30) என்பவரை இரு வீட்டு பெற்றோர் விருப்பத்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கார்த்திக் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மாமன் மகன் என்பதால் சவுமியா வின் பெற்றோர் தனது மகளை சமாதானப்படுத்தி வந்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை வேலைக்கு செல்லாமல் கார்த்திக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், சவுமியாவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சவுமியா  நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு, சைதாப்பேட்டை துரைசாமி தோட்டம் 2வது தெருவில் உள்ள குடிசைமாற்று வாரிய வீட்டில் வசித்து வரும் தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

பிறகு கார்த்திக் தனது மனைவியை சமாதானம் படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல ேநற்று காலை 10 மணிக்கு தனது மாமியார் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் சவுமியா மட்டும் தனியாக இருந்தார். மற்றவர்கள் வேலைக்கு ெசன்று விட்டனர். தனது மனைவியிடம் வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அதற்கு சவுமியா, ‘‘நான் இனி உன்னுடன் வாழ மாட்டேன்’’ என்று கூறி வீட்டை விட்டு வெளியே செல்’’ என்று சத்தம் போட்டுள்ளார். ‘‘நீ வீட்டிற்கு வரவில்லை என்றால் குழந்தைகள் பள்ளி படிப்பு வீணாகிவிடும்’’ என்று தொடர்ந்து வீட்டிற்கு வருமாறு கார்த்திக் அழைத்துள்ளார். அப்போது, ‘‘என் அப்பா, அம்மா வீட்டில் இல்லாத நேரத்தை தெரிந்து வீட்டிற்கு வந்து என்னிடம் தகராறு செய்கிறாயா’’ என்று கூறி கணவனை கடுமையாக சவுமியா திட்டியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் தகராறு முற்றி கைக்கலப்பாக மாறியது. இதில் சவுமியா  தனது கணவர் கார்த்திகை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டு சமையல் அறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து தனது மனைவி சவுமியாவின் கழுத்தை கொடூரமாக அறுத்தார். இதில் சவுமியா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சவுமியா அலறும் சத்தத்தை கேட்டு அருகில் வசிப்போர் ஓடி வந்தனர். இதை பார்த்த கார்த்திக் அவசரத்தில் தப்பிக்க முடியாமல் தவித்து, தனது மனைவியை கொலை செய்த அதே கத்தியால் தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் சைதாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதைதொடர்ந்து உயிழந்த சவுமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலை குறித்து அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: