ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து இன்ஜினியரிடம் நகை, பணம் பறிப்பு

பல்லாவரம்: மாங்காடு அருகே சாப்ட்வேர் இன்ஜினியரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துச் சென்று அவரிடம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவடி, கோவில்பதாகை, பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (28). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவர் தினமும் சென்னையில் உள்ள தனது அலுவலகத்திற்கு ஆவடி அன்னனூர் ரயில் நிலையத்தில் இருந்து செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது, இவருக்கு ஆவடி, காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விக்னேஷ் (23), ஆவடி ஆனந்தன் நகரை சேர்ந்த அருண்குமார் (21) மற்றும் திருமுல்லைவாயல், மணிகண்டபுரம் பகுதியை சேர்ந்த யாசிம் (19) என்பவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், 3 பேரும் நேற்று லோகநாதனை தொடர்பு கொண்டு ஜாலியாக வெளியில் சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபடலாம் என்று கூறி ஆட்டோவில் வண்டலூருக்கு புறப்பட்டனர். அவர்கள் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மாங்காடு அருகே வந்தபோது, விக்னேஷ் உள்ளிட்ட மூன்று பேரிடமும் லோகநாதன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்றார். அப்போது, அவர்கள் லோகநாதனை கடுமையாக தாக்கி அவர் அணிந்திருந்த செயின், மோதிரம் உள்ளிட்ட நகைகள், அவரது ஏடிஎம் கார்டுகள் மற்றும் லோகநாதன் வைத்திருந்த விலையுயர்ந்த இரண்டு செல்போன்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு, அவரை நடுவழியில் இறக்கி விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். புகாரின் பேரில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: