ரூ.8 லட்சம் கரன்சிகள் பறிமுதல்

சென்னை: கேரளாவைச் சேர்ந்த மனாஸ் என்பவர் நேற்று அதிகாலை 2 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் தோஹாவிலிருந்து கோழிக்ககோடு விமான நிலையம் வந்துள்ளார். அவரை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது  அவரின் பையில் 20 ஆயிரம் கத்தார் ரியால் மற்றும் 20 ஓமன் ரியால் கரன்சி நோட்டுகள் இருந்ததை சிஐஎஸ்எப் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.  

இந்த கரன்சிகளின் இந்திய மதிப்பு ரூ.8.4 லட்சம் ஆகும்.   இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தயபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த கரன்சிகளை அவர் கொண்டு வந்துள்ளது தெரியவந்தது. இதனைத் ெதாடர்ந்து அவரை சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: