சென்னை: கேரளாவைச் சேர்ந்த மனாஸ் என்பவர் நேற்று அதிகாலை 2 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் தோஹாவிலிருந்து கோழிக்ககோடு விமான நிலையம் வந்துள்ளார். அவரை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரின் பையில் 20 ஆயிரம் கத்தார் ரியால் மற்றும் 20 ஓமன் ரியால் கரன்சி நோட்டுகள் இருந்ததை சிஐஎஸ்எப் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.