சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: இப்போது இலங்கையில் அரசியல் குழப்பங்களால் உலக தமிழர்கள் மிகுந்த கவலை அடைந்திருக்கின்றனர். காரணம், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இடையூறு இல்லாத வாழ்வாதாரமும், அச்சம் இல்லாத வாழ்க்கையுமே தேவைப்படுகிறது. தமிழர்களுக்கு சோதனையான இந்த தருணத்தில் இந்திய அரசு இலங்கை அரசின் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து ஆக்கப்பூர்வமான முறையிலே செயல்பட்டு, அங்கே வாழும் தமிழ்மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் கொடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.