ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு தேர்தல் வருமா? : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஒரே  நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்  எப்போது வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலும்,  சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் வரும் என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அது நிச்சயம் நடக்காது.

அதேபோன்று, 20 சட்டமன்ற இடைத்தேர்தலில் 7 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று  முதல்வர் பேசியிருப்பதாக கூறுகிறார்கள். அப்படி அவர் பேசவில்லை. 20 தொகுதியையும் நாங்கள் பிடிப்போம். பிரதமர் நரேந்திரமோடி பலமானவரா, பலவீனமானவரா? என்பதற்கு தேர்தலில் தான் விடை கிடைக்கும். இதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: