தெலங்கானாவில் சந்திர சேகர ராவ் வேட்பு மனு தாக்கல்

ஐதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் சந்திரசேகர ராவ் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம்  7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில் மீண்டும் ஆட்சியை பிடிக்க தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும், முதல்வருமான சந்திரசேகர  ராவ் தீவிர முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், கஜ்வால் தொகுதியில் போட்டியிட உள்ள சந்திரசேகர ராவ், நேற்று  வேட்பு மனுவை தாக்கல்  செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், “நான் எப்போதும் கடவுள், மக்களின் ஆசிர்வாதத்தை பெற்றுதான் தேர்தலில் போட்டியிடுவேன்.  இவர்களின் ஆசிர்வாதத்துடன் நாங்கள் 100 தொகுதிகளில் வெற்றிபெறப் போகிறோம் நான் ெவற்றி பெற்ற மிகப்பெரிய யுத்தம், தெலங்கானா தனி  மாநிலம் யுத்தம்தான்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: