புதுடெல்லி: மத்திய அரசு நிதி உதவி அளிப்பது ஏர் இந்தியா நிறுவன பங்கு விற்பனைக்கு மாற்று அல்ல. பங்கு விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என ஏர் இந்தியா நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரதீப் சிங் கரோலா தெரிவித்தார். ஏர் இந்தியா நிறுவனம் 55,000 ேகாடி கடனில் மூழ்கியுள்ளது. இதை சமாளிக்க மத்திய அரசு 29,000 கோடி நிதி வழங்குகிறது. இது பங்கு விற்பனைக்கு மாற்றானது அல்ல. நிலைமை சீரடைந்ததும் பங்கு விற்பனை மீண்டும் துவங்கும் என்றார்.