ராமேஸ்வரம் : கஜா புயல் நாளை மாலை பாம்பன் மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனுஷ்கோடி, கம்பிபாடு பகுதியில் இருந்து மீனவர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.