மதுரை : நாளை மாலை கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது கனமழை முதல் மிககனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் ,புதுச்சேரியில் உள்ள 7மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மற்றும் ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.