சென்னை: பட்டாசு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம் காரணமாக, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிலாளர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அதை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் கூறினார்.