திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி, ஊராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் பேனர்களை அகற்ற ஆணையிட்டுள்ளார். கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேனர்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.