சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயலின் வேகம் மணிக்கு 7 கி.மீட்டரிலிருந்து 10 கி.மீட்டராக அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், நாகையிலிருந்து வடகிழக்கே 580 கி.மீ தூரத்திலும், சென்னையிலிருந்து கிழக்கே 490 கி.மீ தொலைவிலும் தற்போது கஜா புயல் நிலைகொண்டுள்ளது. மேற்கு தென்மேற்கில் புயல் நகர்ந்து வலுகுறைந்து பாம்பன் - கடலூர் இடையே நாளை மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார். கஜா புயல் மணிக்கு 80 முதல் 100 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும். இன்று இரவு 11.30 மணியளவில் அதிதீவிர புயலாக மாறக்கூடும். காற்றின் அமைப்பை பொறுத்து புயலின் வேகம் இருக்கும்.