கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கூட்டமாக வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தும் யானைகளை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். ஓசூர் அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனத்தில் 40 காட்டு யானைகள் ஒரு வாரமாக முகாமிட்டுள்ளது. இரவு நேரத்தில் அங்கிருந்து வரும் யானைகள் பயிர் செய்யப்படுள்ள தக்காளி, கேழ்வரகு, போன்றவற்றை மிதித்து சேதப்படுத்தி விடுவதால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.