சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கூட்டாக தொழில் தொடங்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக குருபரன் என்பவர் கைது செய்யப்பட்டார். மயிலாப்பூரை சேர்ந்த குருபரன், ஹரிகிருஷ்ணன் என்பவரிடம் ரூ. 65 லட்சம் மோசடி செய்தாக புகார் எழுந்தது. இதனையடுத்து தேனாம்பேட்டை தனியார் விடுதியில் பதுங்கியிருந்த போது குருபரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.