புதுடெல்லி: எம்.எல்.ஏக்களை ஒப்பிடுகையில் எம்.பிக்களே அதிக நாட்கள் பணியில் இருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை அனைத்து மாநிலங்களில் நடந்த பேரவை கூட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற கூட்டங்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. இதன்படி, ஓராண்டில் நாடு முழுவதும் உள்ள பேரவைகளில் சராசரியாக கூட்டம் நடக்கும் நாட்களின் எண்ணிக்கை 28 ஆக உள்ளது. அதுவே நாடாளுமன்ற மக்களவை நடக்கும் நாட்களின் எண்ணிக்கை 70, மாநிலங்களவை செயல்படும் நாட்களின் எண்ணிக்கை 69 எனக் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளா மற்றும் கர்நாடகாவில் 46 நாட்கள் பேரவை கூட்டங்கள் நடந்துள்ளன. மேலும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 45, ஒடிசாவில் 42 என பேரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.