ஐகோர்ட் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி... சொத்து வழக்கில் தீர்ப்பு கிடைக்காததால் முடிவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் முன்பு முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆட்டயம்பட்டியை சேர்ந்த  பச்சையப்பன் என்பவர் சொத்து வழக்கில் நீதிமன்றத்தில் உரிய தீர்ப்பு வழங்கவில்லை என்று கூறி வடக்கு நுழைவு வாயில் முன்பு மண்ணெணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்ச்சி செய்தார். தீ பற்ற வைக்கும் நேரத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் பச்சையப்பனை விசாரணைக்காக காவல் துறையினர் அழைத்து சென்றனர். பச்சையப்பனுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாகவும் இது தொடர்பான வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 1996-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் இன்னும் நீதி கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக பச்சையப்பன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: