சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் முன்பு முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆட்டயம்பட்டியை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் சொத்து வழக்கில் நீதிமன்றத்தில் உரிய தீர்ப்பு வழங்கவில்லை என்று கூறி வடக்கு நுழைவு வாயில் முன்பு மண்ணெணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்ச்சி செய்தார். தீ பற்ற வைக்கும் நேரத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.