சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நவீன இருதய அறுவை சிகிச்சை அரங்கத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். குழந்தைகள் மரபணு மற்றும் மூலக்கூறு ஆய்வகம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார். 834 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏழை, எளிய குடும்பங்கள் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.